Wednesday, 15th May 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
திருச்சி: கால்நடைகள், பறவைகள் ஆகியவற்றுக்கு தாகம் தீர்க்கும் தண்ணீர் தொட்டிகளை சமூக ஆர்வலர்கள் அமைத்து வருகின்றனர்.
கொரோனா வைரஸ் நோய் தொற்று ஊரடங்கு நடவடிக்கையால் பொதுமக்கள் அவரவர் வீடுகளில் முடங்கி உள்ளனர். இந்நிலையில் கால்நடைகள் போக்குவரத்து இல்லாத சாலைகள் தெருக்களில் சுற்றி திரிந்து வருகின்றனர்.
ஏற்கனவே கொரோனா தொற்று பாதிப்பு உள்ள நிலையில் வெயிலும் வாட்டி வருகிறது. இதனால் கால்நடைகள், பறவைகள் உள்ளிட்ட ஜீவராசிகளுக்கு உணவு குடிநீர் கிடைக்காமல் அவதிக்குள்ளாகும் சூழல் எழுந்துள்ளது.
கால்நடைகளுக்கு தாகம் தீர்க்கும் வகையில் சமூக ஆர்வலர்கள் சிலரது வீட்டின் மாடிப்பகுதிகளில் குடிநீர் உணவு வைத்து உதவி வருகின்றனர். இதனைத்தொடர்ந்து அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை சார்பில் திருச்சி புத்தூர் பகுதியில் 24 மணி நேரமும் கால்நடைகளுக்கு குடிநீர் கிடைக்க தனது வீடுகளின் முன்பு தண்ணீர் தொட்டி அமைத்துள்ளனர்.
அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை சார்பாக திருச்சி புத்தூர் பகுதியில் அமைத்து உள்ளார்கள். இதனை அறக்கட்டளை நிர்வாகி விஜயகுமார் ஒருங்கிணைத்து வருகிறார்.